மஇகா தலைமையகம் முன் இன்று மாணவர்கள் மறியல்!

நாள்: 23 ஜூன் 2013  ஞாயிறுக்கிழமை:நேரம்: காலை 10.00  இடம்: ம இ கா தலைமையகம்

மெட்ரிகுலேசன் கல்விக்கு விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.

mic_picஇதுவரை 600 மாணவர்களுக்கு மட்டுமே இடம். 1,500 என்று கூறிவிட்டு ஏன் உண்மையான தகவல் தர மறுக்கிறார்கள்? மெட்ரிகுலேசன் துறையினர் கேட்கும் அடிப்படைக் கல்வித் தகுதியை விட பன் மடங்கு சிறப்பு கல்வி அடைவு நிலைகளைப் பெற்றிருந்தும் நம் இன மாணவர்கள் இன்னும் நூற்றுக் கணக்கானோர் அக்கல்வி வாய்ப்பு வழங்கப் படாமல் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

A-Thiruvengadamஇது சார்பாக மஇகா முயற்சிகள் எடுத்து வந்தாலும் அது பயன் தருவதாக இல்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு கொடுக்கும் அழுத்தத்தை இது போன்ற போரட்டம் வழி அதிகரிக்க இயலும் என்கிறார்கள் அதன் ஏற்பாட்டு குழுவினர். மஇகா துயிலில் இருந்து எழுந்து உரிமை கோரி போரட எங்களுடன் பவணி வர வேண்டும் என்கின்றனர்.

நமது இனம் படிக்க வேண்டும் என வாய்கிழிய கத்துகிறார்கள், இப்போ படிக்க ஆவலுடன் பேரணிக்கு வருகிறார்கள், இவர்களுக்கு பதில் சொல்லுங்கள் என்கிறார் இதன் ஏற்பாட்டாளர் ஆ. திருவேங்கடம்.