ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு தீ தேர்வு செய்யப்பட்டார்

khaledஜோகூர் சுல்தானுக்குத் தாம் பரிந்துரை செய்த பல வேட்பாளர்களில் தீ சியூ  கியோங்-கும் ஒருவர் என அந்த மாநில மந்திரி புசார் காலித் நோர்டின்  கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் விடுத்த  அறிக்கைக்குப் பதில் அளித்த காலித், ஆட்சி மன்றத்தில் சீன வம்சாவளியைச்  சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டும் என்று மட்டும் சுல்தான் இப்ராஹிம்  இஸ்காண்டார் கேட்டுக் கொண்டதை ஒப்புக் கொண்டார்.

என்றாலும் அந்தப் பதவியை யார் ஏற்பது என்பதை இறுதி முடிவு செய்வது  சுல்தானுடைய உரிமை என அவர் மேலும் சொன்னார்.

“மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனத்துக்கு முன்பு சுல்தான் அளித்த  பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள பல சீனர்களை  பட்டியலிட்டேன்.”

தீ-உடன் தியோ யாப் குன் (மசீச-பாலோ) லாவ் சின் ஹுன் (கெராக்கான் –
பெமானிஸ்) ஆகியோர் சீனர்களான பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.