சில இலக்குகளை அடையவில்லை என்பது உண்மையே: மந்திரி புசார்

1 khalidசிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், மெராக்யாட் எக்கோனோமி சிலாங்கூர் (எம்இஎஸ்) திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சில இலக்குகளை அடையமுடியாமல் போனதை ஒப்புக்கொண்டார்.

இலவச குடிநீர், சிலாங்கூர் குழந்தைகள் நிதி, மூத்த குடிமக்கள் உதவி போன்றவை அவற்றில் அடங்கும்..

“இவை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவில்லை. எனவே, இத்திட்டங்கள் அவற்றின் இலக்கை அடைவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்”.  காலிட் இன்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் இவ்வாறு கூறினார்