குகன் வழக்கு குறித்து பேசாதீர்: மக்களவை துணை தலைவர்

1 kuganதடுப்புக்காவலில் இறந்துபோன ஏ.குகன் விவகாரம் பற்றிப் பேச வேண்டாம் என மக்களவை துணைத் தலைவர் இஸ்மாயில் முகம்மட் சயிட் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தடை விதித்துள்ளார்.

ஜூன் 20-இல், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தாலும் அதைப் பற்றிப் பேசுவது நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிடுவதாக அமையும் என்றாரவர்.

“தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் அரசாங்கம் மேல்முறையீடு செய்ய இன்னும் 30 நாள் அவகாசம் உள்ளது”, என்பதை இஸ்மாயில் சுட்டிக்காட்டினார்.

அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பேசிய என்.சுரேந்திரன் (பிகேஆர்- பாடாங் செராய்), தடுப்புக்காவல் மரண விவகாரம் தொடர்பில் போதுமான நடவடிக்கை இல்லை என்று குறிப்பிட்டதை அடுத்து இஸ்மாயில் இவ்வாறு கூறினார்.

TAGS: