வேறு நாடுகளில் குடியேறுமாறு ஏர் ஏசியா X தலைமை நிர்வாகிக்கு பாங் மொக்தார் ஆலோசனை

azranபொதுத் தேர்தலுக்குப் பின்னர் உணர்வுகளைத் தூண்டக் கூடிய தலையங்கங்களை  வெளியிடும் உத்துசான் மலேசியாவைக் குறை கூறிய ஏர் ஏசியா X தலைமை  நிர்வாகி அஸ்ரான் ஒஸ்மான் ரானி ‘தாம் விரும்பும் நாட்டில் குடியேறலாம்’ என  பிஎன் கினாபாத்தாங்கான் எம்பி பாங் மொக்தார் ராடின் ஆலோசனை  கூறியிருக்கிறார்.

“அவரைப் போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்க வேண்டியதில்லை,” என
மக்களவையில் இன்று அரச உரை மீதான விவாதத்தில் பேசிய அவர் சொன்னார்.

அவையில் தம்மை தற்காத்துக் கொள்ள முடியாத ஒருவரைப் பற்றி பேச  வேண்டாம் என சபாநாயகர் பண்டிக்கார் அமின் மூலியாஎச்சரித்ததையும்  பொருட்படுத்தாமல் பாங் மொக்தார், அஸ்ரானை Melayu biadap என  வருணித்தார்.