ஜூலை 24-இல் கோலா பெசுட் இடைத் தேர்தல்

1 ecகோலா பெசுட் இடைத் தேர்தல் ஜூலை 24, புதன்கிழமை நடைபெறும்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் ஜூலை 12. அது ஒரு வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை திரெங்கானுவில் விடுமுறை நாளாகும்.

இதனை இன்று அறிவித்த தேர்தல் ஆணையம், முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 20-இல் நடத்தப்படும் எனத் தெரிவித்தது. இந்தத் தேர்தல் நோன்பு மாதமான ரமலான் மாதத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டாக்டர்  ஏ. ரஹ்மான் மொக்தார் ஜுன் 26-இல் காலமானதை அடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.