பிகேஆர் குற்றச்சாட்டை மறுக்கிறது பினாங்கு எம்ஏசிசி

macc-aபினாங்கில் பொதுத் தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்டதாக புகார் செய்த வேட்பாளர்களில் எவரும் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படவில்லை என  பிகேஆர் சுமத்திய குற்றச்சாட்டை பினாங்கின் மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மறுத்துள்ளது.

முன்னாள் பினாங்கு சட்டமன்றத் தலைவரும் தெலோக் பாகாங் வேட்பாளருமான அப்துல் ஹலிம் உள்பட, ஏழு புகார்தாரர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டதாக மாநில எம்ஏசிசி தலைவர் சாமராஜூ மாணிக்கம் கூறினார்.

“வழக்கப்படி அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.