பக்காத்தான் மறுதேர்தல் வேண்டி இசி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தது

1 sivaபக்காத்தான் ரக்யாட், மற்றவற்றோடு 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் செல்லா என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணைய(இசி)த்தின் ஏழு உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது.

இசி உறுப்பினர்கள் அழியா மை என்ற பெயரில் மோசடி செய்தார்கள் என்றும் ‘பாரபட்சமாக’ நடந்துகொண்டார்கள் என்றும் கூறி அதன் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக சுபாங் எம்பி ஆர். சிவராசா கூறினார்.

“நீதிமன்றம் எங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் (பொதுத் தேர்தல்) முடிவுகளைச் செல்லாதென அறிவி்த்தாக வேண்டும்.  222 நாடாளுமன்ற இடங்களின் முடிவுகளும் செல்லாதவை என அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” , என்றாரவர்.