இபிஃஎப் சேமிப்பைக் கொண்டு கடனை அடைக்க முடியாது

epfகடன் அட்டைகளால் ஏற்பட்ட கடன்களைத்  தீர்க்க முடியாமல் நொடித்துப் போனவர்களுக்குக் கடன்களைச் செலுத்துவதற்கு உதவியாக அவர்களின் ஊழியர் சேமிப்பு நிதி (இபிஎஃப்)யிலிருந்து பணத்தை மீட்டுக்கொள்ள அனுமதிக்கும் திட்டம்  எதையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.

இபிஃப் சேமிப்பு பணி ஓய்வுக் காலத்துக்காக சேமிக்கப்படுவது என்று நிதி துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

அதிலிருந்து கடனட்டைகளால் ஏற்படும் கடனைத் தீர்க்க பணத்தை மீட்டுக்கொள்ளத் தொடங்கினால் பணி ஓய்வுக்கான பணமெல்லாம் கரைந்து போகும் என்றாரவர்.

-Bernama