சுவாராம்: மற்ற தடுப்புக்காவல் மரணங்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

devarajanஇவ்வாண்டில் இதுவரை 12 தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் ஒரே ஒரு மரணம் தொடர்பில்தான் மூன்று போலீஸ்காரர்கள்மீது குற்றம் சாட்டப்படுள்ளது என்று கூறும் சுவாராம் தடுப்புக்காவல் மரணங்கள் எல்லாவற்றுக்குமே போலீஸ் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

“என்.தர்மேந்திரன் மரணம் தொடர்பில் மூன்று போலீஸ்காரர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றவாளி என்ற சந்தேகத்துக்குரிய இன்னொருவரைக் காணவில்லை.

“ஜூன் மாதம் தம்பினில் நிகழ்ந்த பி.கருணாநிதியின் மரணம் தொடர்பில், அவரது உடலில் காயங்கள் இருந்தபோதும், எவர்மீதும் இன்றுவரை குற்றம் சுமத்தப்படவில்லை”, என  சுவாராம்  ஒருங்கிணைப்பாளர்  ஆர்.தேவராஜன் (வலம்)  ஓர் அறிக்கையில் கூறினார்.

தடுப்புக்காவல் மரணங்கள் குறித்து விசாரிக்க சுயேச்சை அமைப்பு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும் என்றாரவர்.