நுருல் இஸ்ஸா, மலேசியாகினி மீது நோங் சிக் வழக்குப் போடுகிறார்

nurul malaysiakiniலெம்பா பந்தாய் அம்னோ தொகுதித் தலைவர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல்  அபிடின், புக்கிட் கியாராவில் நிலக் கொள்முதல் ஒன்று தொடர்பில் தமக்கு எதிராக  அவதூறு கூறியதாக லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் மற்றும் இருவர் மீது வழக்குப் போட்டிருக்கிறார்.

ஜுலை 17ம் தேதி மெஸர்ஸ் ராஜா ரிஸா அண்ட் அசோசியேட்ஸ் என்னும் வழக்குரைஞர் நிறுவனம் வழியாக சிவில் உயர் நீதிமன்ற பதிவகத்தில் முன்னாள்  கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சருமான ராஜா நோங் சிக் அந்த  வழக்கைச் சமர்பித்துள்ளார்.

பிகேஆர் உதவித் தலைவருமான நுருல் இஸ்ஸாவுடன் மலேசியாகினி செய்தி  இணையத் தள உரிமையாளரான Mkini Dotcom Sdn Bhd, மலேசியாகினி நிருபர்  லு வெய் ஹுங் ஆகியோரையும் பிரதிவாதிகளாக அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார்.