அன்வார் மீதான மேல்முறையீடு ஒத்திவைப்பு

anwarமுறையீட்டு நீதிமன்றம், இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் விடுவிக்கப்பட்டதை அடுத்து அரசுத் தரப்பு செய்துகொண்ட மேல்முறையீடு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

அன்வாரின் தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் விசாரணையைத் தள்ளிவைக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்மானித்தது. இனி, ஆகஸ்ட் முதல் நாள் மேல்முறையீடுமீது முடிவெடுக்கப்படும்.