சரவாக் டிஏபி கிராமப்பகுதிகளை நோக்கிப் பயணிக்கிறது

dapசரவாக் டிஏபி அம்மாநிலத்தின் 20 சட்டமன்றத் தொகுதிகளில் தன் கிளைகளை அமைக்கும்.  கிராமப்புறங்களில் பிஎன்னுக்குள்ள செல்வாக்கை உடைத்தெறியும் நோக்கில் அவ்வாறு செய்யப்படும் என்று கூறிய அதன் தலைவர் சொங் சியெங் ஜென், அதற்காக சுமார் ரிம 600,000 ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

“அடுத்த பொதுத் தேர்தலில்  தேசிய சீரமைப்பு  அல்லது  ‘ubah'(மாற்றம்) காண்பது,  சரவாக் கிராமப்புறங்களில் என்ன சாதிக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கும்”, என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். .