சித்தியாவங்சாவை பிஎன்னே தக்க வைத்துக்கொண்டது

bn சித்தியாவங்சா நாடாளுமன்ற தொகுதிக்கு எதிராக பிகேஆர் பதிவுசெய்திருந்த தேர்தல் முறையீட்டுக்கு ஆளும் கூட்டணி மறுப்புத்  தெரிவித்ததை  கோலாலும்பூர் தேர்தல்  நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து  அத்தொகுதியை பிஎன்னே தக்க வைத்துக்கொண்டது.

அத்தொகுதி  பிகேஆர்  வேட்பாளர்  இப்ராகிம் யாக்கூப் பதிவுசெய்த தேர்தல் முறையீடு  குறைபாடுடையது என நீதிபதி முகம்மட் யூசுப் கூறினார். அதன் பயனாக பிஎன்னின் அஹமட் பவுசி ஸஹாரியே சித்தியாவங்சா எம்பி-ஆக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார்.