ஸ்ரீ பிரிஸ்தானா பள்ளி தலைமையாசிரியர் விடுப்பில் செல்ல உத்தரவு

1-nasirசுங்கை பூலோ  ஸ்ரீபிரிஸ்தானா பள்ளி  தலைமையாசிரியர் முகம்மட் நாசிர் முகம்மட் நூரை ஒரு வாரம் விடுப்பில் செல்லுமாறு சிலாங்கூர் கல்வித் துறை பணித்துள்ளது.

இதை முகம்மட் நாசிரே தெரிவித்ததாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. அவர்,  செளஜானா உத்தாமா போலீஸ் நிலையத்தில் தமக்கு அவதூறு கற்பிக்கப்பட்டதாக புகார் ஒன்றைப் பதிவு செய்த பின்னர் உத்துசானிடம் பேசினார்.

பலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தம்மை இழித்தும் பழித்தும் பேசியதுடன் மிரட்டியும்  இருப்பதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.