உதயாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாவிட்டால் இண்ட்ராப் ஆர்ப்பாட்டம் செய்யும்

1 udayaஇண்ட்ராப், சிறையில் உள்ள அதன் தலைவர் பி.உதயகுமாரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாவிட்டால் காஜாங் சிறைச்சாலைக்குமுன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 1, உதயா மருத்துவரைக் காண்பதற்கான நாளாகும்.

அதிகாரிகள் அதற்கு இணங்காவிட்டால் உதயகுமாரின் துணைவியார் எஸ்.இந்திரா தேவியின் தலைமையில் 500க்கு மேற்பட்டோர் சிறைச்சாலை முன்புறம் முகாமிடுவார்கள் என்று இண்ட்ராப் தலைமைச் செயலாளர் எஸ். தியாகராஜன் இன்று கூறினார்.

TAGS: