போலீஸ் குறிப்பை அம்பலப்படுத்தவிருந்தாராம் சஞ்சீவன்

sanjeevanகடந்த வாரம் நெகிரி செம்பிலானில் சுடப்பட்ட குற்றத் தடுப்பு ஆர்வலர் ஆர். ஸ்ரீசஞ்சீவன், போதைப் பொருள் கும்பல்களுடன் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் பற்றி விவரங்கள் அடங்கிய குறிப்பு ஒன்றை  இவ்வாரம் அம்பலப்படுத்த விருந்தார்.

rafiziஇதனைத் தெரிவித்த பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி,  “அது போலீசிலிருந்து பெறப்பட்ட இரகசிய குறிப்பு என்று சஞ்சீவன் கூறினார்”,  என்றார்.  போதைப் பொருள் கும்பல்களுடன் தொடர்பு வைத்துள்ளதற்காக விசாரிக்கப்பட்டுவரும்  போலீஸ் அதிகாரிகளின் பெயர்பட்டியல்  அதில்  இருப்பதாகவும்  அவர் சொன்னார்.

சுடப்படுவதற்கு முதல் நாள் தம்மைச் சந்தித்தபோது சஞ்சீவன் தம்மிடம்  இதைத்  தெரிவித்ததாக ரபிஸி செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

ஆனால், சஞ்சீவி அந்த அதிகாரிகளின் பெயர்களைத் தெரிவிக்கவில்லை.

சஞ்சீவன் பாஹாவில் சுடப்பட்டதற்கு அது காரணமாக இருக்கலாம் என்றாரவர்.