அமைச்சர், துணை அமைச்சர்கள் நியமனம் சட்டப்படிச் செல்லுமா? நாளை விசாரணை

m-kulasegaranகடந்த மே மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக (செனட்டர்களாக) இல்லாத ஐவர் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது சட்டப்படிச் செல்லாது என்று டிஎபி பாரட் ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

அமைச்சர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அப்துல் வாஹிட் ஒமார் மற்றும் பால் லோ செங் குவான், துணை அமைச்சர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பி. வேதமூர்த்தி, டாக்டர் லோகா பால மோகன் ஜகநாதன் மற்றும் அஹமட் பாஷா முகமட் ஹனிப்பா ஆகியோரே அந்த ஐவராவர்.

இவ்வழக்கு நாளை காலை மணி 9.00க்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஸலிஹா யூசுப் முன் விசாரணைக்கு வருகிறது.

TAGS: