விற்பனைச் சந்தைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: மைக்கி

eswaranமலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கக் கூட்டிணைப்பு (மைக்கி),  அரசாங்க ஆதரவுடன் நடக்கும் அனைத்துலக விற்பனைச் சந்தைகளால்  தங்களுக்கு  இழப்புகள் ஏற்படுவதாகக் கூறும் வியாபாரிகளுக்கும் வணிகர்களுக்கும்  ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.

அந்தச் சந்தைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மைக்கி தலைவர் கே.கே. ஈஸ்வரன், அதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருப்பதாகக் கூறினார்.

“விழாக்காலங்களில்தான் சட்டப்பூர்வமான வணிகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல வியாபாரம் நடக்கும், ஆனால், இப்படிப்பட்ட விற்பனைச் சந்தைகள் அவர்களின் வியாபாரத்தைப் பாதிக்கின்றன”, என்றவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.