தலைமையாசிரியர் ‘பாலே இந்தியா, சீனா’ என்று சொன்னதை ஒப்பினார்

prakashஷா ஆலம் எஸ்எம்கே ஆலாம் மெகா தலைமையாசிரியர், இந்திய, சீன மாணவர்களை நோக்கி ‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிப் போங்கள்’ என்று சொன்னதை ஒப்புக்கொண்டார்.

இதைத் தெரிவித்த மஇகா தொகுதித் துணைத் தலைவர் ஏ.பிரகாஷ் ராவ், (வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர்)  அவ்வாறு கூறியதற்காக  அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் என்றார். மலாய் மாணவர்களை நோக்கி ‘இந்தோனேசியாவுக்குப் போங்கள்’ என்று கூறியதாகவும் தலைமையாசிரியர் தெரிவித்திருக்கிறார்.

“வெள்ளிக்கிழமை மாணவர்களிடம் மன்னிப்பு கேட்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்”, என்று பிரகாஷ் ராவ் கூறினார்.