சபா ஆர்சிஐ அன்வாரை விசாரிக்கும்

anwarஎதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  சபாவில் போலி அடையாளக்  கார்டுகள் வழங்கப்பட்டது பற்றி விசாரிக்கும் ஆர்சிஐ என்ற அரச விசாரணை  ஆணையத்திடம் இன்று தொடக்க நிலை சாட்சியத்தை அளிப்பார்.

அந்தத் தகவலை அன்வார் நேற்று உறுதிப்படுத்திய அன்வார், எல்லாத்
தரப்புக்களுடைய நலன்களையும் கருத்தில் கொண்டு ஆர்சிஐ குழுவுக்கு முழு  ஒத்துழைப்புக் கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக சொன்னார்.

கோலாலம்பூரில் இன்று பிற்பகல் மணி மூன்று வாக்கில் அவர் தொடக்க நிலை  சாட்சியத்தை வழங்குவார்.

அதற்குப் பின்னர் கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றத்தில் ஆர்சிஐ நடவடிக்கைகளின் போது தாம் சாட்சியமளிப்பதற்கு தேதி நிர்ணயிக்கப்படும்  என்றும் அன்வார் தெரிவித்தார்.