தேச நிந்தனை குற்றம் புரிந்ததா என சுவாராம்மீது விசாரணை

suaramசுவாராம், ஜூலை 19-இல் நிதிதிரட்டும் விருந்து நடத்தியதன் தொடர்பில் தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளதா எனப் புலன் விசாரணை நடத்தப்படுவதுபோல் தெரிகிறது.

போலீஸ் தங்களிடம் இவ்வாறு தெரிவித்திருப்பதாக அந்த என்ஜிஓ அதன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

“எங்கள் நிர்வாக இயக்குனர் போலீசைத் தொடர்புகொண்டு பேசினார். போலீஸ் அதிகாரி அவரிடம் சுவாராம்மீது தேசிய நிந்தனை சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார்”, என அது கூறியது.