அன்வார்-கர்பால் கடிதம் மீது அம்னோ ஆள் எம்ஏசிசி-யிடம் செல்கிறார்

anwarஎதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், டிஏபி தலைவர் கர்பால் சிங்  ஆகியோரது ஊழல் நடைமுறை எனக் கூறிக் கொள்ளும் மர்மக் கடிதம் ஒன்று  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எட்டுப் பக்கத்தைக் கொண்ட அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை எம்ஏசிசி  விசாரிப்பதற்கு உதவியாக அந்தக் கடிதம் அதனிடம் கொடுக்கப்பட்டுள்ளது என  கடந்த தேர்தலில் அம்னோ சார்பில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டியிட்ட  மஸ்லான் இஸ்மாயில் சொன்னதாக இன்று உத்துசான் மலேசியா செய்தி  வெளியிட்டுள்ளது.

“நான் ஏற்கனவே சொன்னது போல அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்திற்கும்  எனக்கும் எந்தத் தொடர்பையும் வைத்திருக்க நான் விரும்பவில்லை. என்றாலும்  பொது நலனைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் அதனை புலனாய்வு செய்ய  வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்,” என மஸ்லான் சொன்னதாகவும்
அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளேடு கூறியது.