சஞ்சீவன் குணமடைவதற்கு அவரது நுரையீரல் கோளாறு ( infection ) தடையாக உள்ளது

sanjeevanமை வாட்ச் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் குணமடைவதற்கு அவரது நுரையீரலில்  ஏற்பட்டுள்ள கோளாறு ( infection ) தடையாக உள்ளது.

சஞ்சீவன் இன்னும் மயக்க நிலையில் செர்டாங் மருத்துவமனையில் இருந்து  வருகிறார்.

சஞ்சீவன் நுரையீரல் கோளாறிலிருந்து விடுபடுவதற்காக மருத்துவர்கள்
காத்திருக்கின்றனர் என்றும் அதற்குப் பின்னர் அவரது நெஞ்சு எலும்பில்
பதிந்துள்ள ரவையை எடுப்பதற்கு அறுவைச் சிகிச்சையை அவர்கள் மேற்கொள்வர்  என்றும் சஞ்சீவனுடைய தந்தை பி ராமகிருஷ்ணன் கூறினார்.

“முதலில் நுரையீரல் கோளாறு போக வேண்டும்,” என்றார் அவர்.

“அந்த ரவை அங்கு உள்ளது. அது சஞ்சீவன் உடலில் எந்த உறுப்பையும்
பாதிக்கவில்லை. அதனால் அவர் முதலில் நுரையீரல் கோளாறிலிருந்து விடுபட  வேண்டும் என மருத்துவர்கள் விரும்புகின்றனர்.”

ஜுலை 27ம் தேதி நெகிரி செம்பிலான் ஜெம்போலில் மோட்டார் சைக்கிளில் சென்ற  இருவர் சஞ்சீவனைச் சுட்டனர். ஆனால் அவர் உயிர் தப்பி விட்டார்.

ஆறு நாட்களுக்கு முன்னர் அவர் செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு  செல்லப்பட்டார். அவர் இன்னும் சுயநினைவின்றி இருந்து வருகிறார்.