பினாங்கில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

shootநேற்று, பினாங்கில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

முதலாவது சம்பவத்தில், காரில் சென்றுகொண்டிருந்த வீரப்பன் கணபதி,37, ஜாலான் அன்சன் சந்திப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். காலை 11.50க்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில்  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் அதிகாரி கான் கொங் மெங் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தில் 14 துப்பாக்கி தோட்டாக்களும் காரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாராங் கத்திகளும் கண்டெடுக்கப்பட்டன.

வீரப்பன்மீது மூன்று குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இரண்டாவது சம்பவத்தில், பூலாவ் திக்குஸில் உள்ள ஒரு பங்களாவை நோக்கி ஆறு தடவை சுடப்பட்டது. ஆனால், யாரும் காயமடையவில்லை.