ஜாம்ரி அம்னோ கட்சித் தேர்தலில் போட்டியிட மாட்டார்

zambry-abdul-kadir-mb-perakவரும் அக்டோபர் மாதம் நிகழும் அம்னோ கட்சித் தேர்தலில் தாம் போட்டியிடப்  போவதில்லை என பேராக் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் ஜாம்ரி அப்துல்  காதிர் அறிவித்துள்ளார்.

“தகுதி பெற்ற மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு வழி விடுவதற்காக நான்
போட்டியிடவில்லை. அத்துடன் மந்திரி புசார் என்ற முறையில் நான் இயல்பாகவே  அம்னோ உச்சமன்றத்தில் உறுப்பினராகி விடுவேன்,” என அவர் நேற்று  ஈப்போவில் மாநில அம்னோ இளைஞர் பிரிவின் நோன்புப் பெருநாள் திறந்த  இல்ல உபசரிப்பின் போது நிருபர்களிடம் தெரிவித்தார்.