ஆலயப் பணம் ‘அபேஸ்’ என்று கூறிய சிஎம்-மீது தெங் சீற்றம்

1-tengபினாங்கு பிஎன்னின் முன்னாள் தலைவர், தெங் சாங் இயோ,  பத்து கவானில் உள்ள 134-ஆண்டுகள் பழமையான ஆலயத்துக்குக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த 500,000 ரிங்கிட்டைத் தாம்  “விழுங்கி  ஏப்பமிட்டு  விட்டதாக” பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கும் இரண்டு சீனமொழி நாளேடுகளும் குற்றம் சாட்டியிருப்பது குறித்து  சீற்றமடைந்துள்ளார்.

அதன் தொடர்பில் போலீசிலும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடமும் புகார் செய்யும் துணிச்சல் உண்டா என அவர் லிம்முக்கு அவர் சவால் விடுத்தார்.

அத்துடன் லிம்முக்கும் இரு செய்தித்தாள்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெங் எச்சரித்தார்.

ஆனால், லிம் தாம் அவ்வாறு கூறவில்லை என மறுத்துள்ளார்.