யுஇசி பட்டதாரிகளைப் பொதுப் பல்கலைக்கழகங்களில் அனுமதிப்பது தொடர்பான விவகாரம் அரசியல்மயமாக்கப்படக் கூடாது என்று பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தேசியப் பாடத்திட்டத்திற்கு வெளியே உள்ள கல்வி முறைகளில் இருந்து வரும் பிற விண்ணப்பதாரர்களைப் போலவே, யுஇசி சான்றிதழ் பெற்றவர்கள் பொதுப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மலாய் மொழி மற்றும் வரலாற்றுப் பாடங்களில் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது இதில் உள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்.
இப்போது நாம் சர்வதேசப் பள்ளிகளுக்கு நிபந்தனைகளை விதித்துள்ளோம், அல்லவா? அதே நிபந்தனைகள் தான் (UEC சான்றிதழ் பெற்றவர்களுக்கும்) பொருந்தும்,” என்று இன்று ஈப்போவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆசிரியர் தின விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் கூறினார்.
“இதற்கு முன்பு மலாய் மொழி மற்றும் வரலாற்றுப் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்துப் பாடங்களையும் அரபு மொழியிலேயே கற்பித்து வந்த தஹ்ஃபிஸ் மற்றும் அரபுப் பள்ளிகளுக்கும் இதே நிபந்தனைகளைத் தான் நாங்கள் விதித்துள்ளோம்.
“அதனால்தான் (UEC சான்றிதழ் பெற்றவர்களுக்கான வழித்தடங்களைத் திறப்பது என்ற) இந்த முடிவை நாங்கள் எடுத்தோம்.
முழுமையான எஸ்பிஎம் (SPM) சான்றிதழைக் கொண்டிருக்கும் பட்சத்தில், தஹ்ஃபிஸ் (tahfiz) நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் சீனத் தனிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அவர் கூறினார்.
முழுமையான எஸ்பிஎம் சான்றிதழ் இல்லாத, ஆனால் மலேசியத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் மலாய் மொழி மற்றும் வரலாற்றுப் பாடங்களை மட்டும் எழுதிய யுஇசி பட்டதாரிகள், சீன மொழியியல் அல்லது சீன ஆய்வுகள் தொடர்பான குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ள மாணவர்கள் மொழி சார்ந்த படிப்புகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் கணக்கியல் போன்ற துறைகளையும் தேர்வு செய்து படிக்கலாம்.
இருப்பினும், குறிப்பிட்ட சில படிப்புகளுக்கான தொழில்முறை அங்கீகாரம் குறித்த இறுதி முடிவுகள், அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்முறை அமைப்புகளால் மட்டுமே தீர்மானிக்கப்படும்.
அமைச்சரவையின் இந்த முடிவை விமர்சித்தவர்களில் முன்னாள் பிரதமர் முஹிதீன் யாசினும் ஒருவர் ஆவார். டிஏபி கட்சியின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட ஓர் அரசியல் முடிவு இது என்று அவர் குற்றம் சாட்டினார்.
-fmt
























