அதிகரித்து வரும் செலவுகள் கட்டுமானத் துறையை பாதிக்கின்றன: பொதுப்பணித்துறை அமைச்சரிடம் தெரிவிப்பு

தேசிய அளவிலான புள்ளிவிவரங்கள், கட்டுமானத் தளங்களில் எதிர்கொள்ளப்படும் செலவு நெருக்கடிகளை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை என்று இரண்டு கட்டுமான மற்றும் ஒப்பந்ததாரர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பணியமைச்சச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறுகையில், உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு கட்டுக்குள் உள்ளதாகவும், ஒப்பந்ததாரர்கள் எந்தவித தாமதமும் இன்றி திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த முடிகிறது என்றும் தெரிவித்தார்.

மலேசிய மாஸ்டர் பில்டர்ஸ் சங்கம் (MBAM) மற்றும் பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்கள் சங்கம் (PKBM) ஆகிய இரு கட்டுமான அமைப்புகள், பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கியிடம் (Alexander Nanta Linggi) விரிவான பொருளாதாரத் தரவுகள் சுட்டிக்காட்டுவதை விட, அதிகரித்து வரும் செலவுகள் கட்டுமானத் துறையைக் கடுமையாகப் பாதித்து வருவதாகத் தெரிவித்துள்ளன.

அமைச்சர் நந்தாவின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்ட கூட்டறிக்கையில், “அத்தியாவசியப் பொருட்களின் விலை கூர்மையாக உயர்ந்துள்ளதால், தேசிய அளவிலான புள்ளிவிவரங்கள் ஒப்பந்ததாரர்கள் சந்திக்கும் உண்மையான செலவு அழுத்தங்களை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. பரந்த புள்ளிவிவர சராசரிகள், தரைமட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் செயல்பாட்டுச் செலவு யதார்த்தங்களை வெளிப்படுத்துவதில்லை,” என்று கூறியுள்ளனர்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு கட்டுக்குள் இருப்பதாகவும், ஒப்பந்ததாரர்கள் கூடுதல் செலவுகளைத் தாங்கிக்கொண்டு திட்டங்களைத் தாமதமின்றி தொடர முடியும் என்றும் நந்தா சமீபத்தில் கூறியிருந்தார்.

இருப்பினும், பேரினப் பொருளாதாரக் குறியீடுகளுடன் ஒப்பந்ததாரர்களின் தரைமட்டத் தரவுகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று இவ்விரு அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில்:

தொழில்துறை டீசல் விலை: 44% உயர்ந்து லிட்டருக்கு ரிம 2.95-லிருந்து ரிம 4.26 ஆக அதிகரித்துள்ளது.

பிட்யூமின் (Bitumen) விலை: 42% உயர்ந்து டன்னுக்கு ரிம 2,125-லிருந்து ரிம 3,025 ஆக உயர்ந்துள்ளது.

Grade 30N ரெடி-மிக்ஸ் கான்கிரீட்: 15% உயர்ந்து ஒரு கன மீட்டருக்கு ரிம 402 ஆக அதிகரித்துள்ளது.

50 கிலோ சிமெண்ட் பை: ஜூன் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 6.7% விலை உயர்ந்துள்ளது.

மேலும், அக்டோபர் 2025 முதல் அமல்படுத்தப்பட்ட கடுமையான போக்குவரத்து விதமுறைகளால் சரக்குக் கட்டணம் 15% முதல் 40% வரை உயர்ந்துள்ளதையும், ரிம 1,700 குறைந்தபட்ச ஊதியம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான EPF மாற்றங்கள் மற்றும் செப்பு (Copper) விலை உயர்வால் தொழிலாளர் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர்.

“பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் இந்த விலை மாற்றங்களுக்கு முன்பே நிலையான விலைக் ஒப்பந்தங்களில் (Fixed-price contracts) கையெழுத்திட்டுள்ளதால், இந்த உள்ளூர் பொருள் விலை உயர்வுகள் திட்டங்களின் லாப வரம்பை நேரடியாகப் பாதிக்கின்றன; குறிப்பாகச் சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்ததாரர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, பொதுப்பணித்துறை அமைச்சகம், கட்டுமானத் தொழில் வளர்ச்சி வாரியம் (CIDB) மற்றும் புள்ளிவிவரத் துறையுடன் நெருக்கமான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்றும், தேசியப் புள்ளிவிவரங்களுடன் கட்டுமான தளங்களின் தரவுகளையும் சேர்த்து மதிப்பிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.