பாகிஸ்தானில் போராட்டம் நடத்துவோருக்குக் கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானில் போராட்டம் நடத்துவோரைப் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் கடுமையாக எச்சரித்துள்ளார். நாட்டு மக்களுக்காக உரையாற்றிய அவர், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பதும், ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதும் பயங்கரவாதச் செயல்கள் என்றார். சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் எச்சரித்தார். ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகளுக்கு COVID-19 தடுப்பூசிகள் கட்டாயமில்லை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் COVID-19 பயணக் கட்டுப்பாடுகளை மீட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகள் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருப்பது அவசியமில்லை. அது மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் பொதுச் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் பொருந்தும். நடைமுறை நாளை மே 12 நடப்புக்கு வரும். 2021-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அரசாங்க…

உக்ரைனில் போரில் உயிரிழந்தார் பத்திரிகையாளர் அர்மான் சோல்டின்

அர்மான் சோல்டின் செவ்வாயன்று கிழக்கு உக்ரைனில் சாசிவ் யார் அருகே ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டார், சம்பவத்தை நேரில் பார்த்த AFP பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். கிழக்கு உக்ரைனில் பல மாதங்களாக நடந்த சண்டையின் மையப்பகுதியான பக்முட் நகரின் புறநகர் பகுதியில் மாலை 4.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. AFP…

இம்ரான் கான் கைது எதிரொலி: பாக்கிஸ்தானில் ராணுவத் தலைமையகம் முற்றுகை,…

முன்னாள் பிரதமர் இம்ரான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவருடைய தி பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாகூரில் உள்ள ராணுவ காமாண்டர் இல்லம், ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். லாகூர், ஃபைசாபாத், பண்ணு, பெஷாவர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி,…

பெரு நாட்டில் தங்கச்சுரங்கம் தீப்பிடித்து 27 பேர் உயிரிழப்பு

பெரு நாட்டில் தங்கச்சுரங்கம் தீப்பிடித்து 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லிமா, தென்அமெரிக்க நாடான பெரு தங்கம் உற்பத்தி செய்வதில் உலகளவில் முதன்மை வகிக்கிறது. அங்கு ஏராளமான தங்க சுரங்கங்கள் காணப்படுகின்றன. அதே சமயம் சுரங்கம் தொடர்பான விபத்துகள் அதிகம் நிகழும் நாடுகளுள் ஒன்றாகவும் திகழ்கிறது. லாஎஸ்பெ…

வறுமையை மறைக்கும் சீனா: அமெரிக்க்கா குற்றச்சாட்டு

உலகளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவாகி வரும் நிலையில் அந்நாட்டில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் ஜி ஜின்பிங்கின் அரசு செயல்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த வகையில் சமீபத்தில், 100 யுவானை ஓய்வூதியமாகப் பெறும் ஒருவர் மளிகை கடையில் நின்று என்ன பொருட்களை…

கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிந்துவிட்டது: உலக சுகாதார நிறுவனம்

கோவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் கூறியது:…

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்

கோலாகல விழாவை காண ஒட்டு மொத்த இங்கிலாந்தும் இப்போதே தயாராகி வருகிறது. விழாவில் இங்கிலாந்து மன்னர் சார்லசை அழைத்து செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட்டு வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. சினிமாவில் தான் மன்னர் ஆட்சி, பிரமாண்டமான அரண்மனை, குதிரை பூட்டிய சாரட் வண்டி போன்ற காட்சிகளை நாம் பார்க்கலாம்.…

கம்போடியாவில் தென்கிழக்காசிய விளையாட்டடுகள் கோலாகலமாக தொடங்கியது

கம்போடியாவில் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் அதிகாரபூர்வத் தொடக்கவிழா மே 5 தொடங்கியது. கம்போடியா அதை முதன்முறையாக ஏற்றுநடத்துகிறது. தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்காக விமான நிலையத்தில் தரையிறங்குவது முதல் போட்டிகள் முடியும்வரை வருகையாளர்களுக்குச் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கக் கம்போடியா முற்படுகிறது. நாட்டை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என்று…

செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் – தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேசும் அமெரிக்கத்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் குறித்துப் பேச பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துள்ளனர். கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து எத்தகைய பாதுகாப்புக் கவசம் இருக்கிறது என்று அவர்கள் வினவினர். திருவாட்டி…

செர்பியா -7ம் வகுப்பு பள்ளி மாணவன் துப்பாக்கிச்சூடு, 8 மாணவர்கள்…

பள்ளிக்கூடத்தில் 7ம் வகுப்பு மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர், 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பல்கிரெடி மாகாணம் விரகார் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் இன்று வழக்கம் போல மாணவ-மாணவிகள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளியில் 7ம்…

கிரம்ளின் மாளிகை மீது டிரோன் தாக்குதல் – அதிபர் புதினை…

அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என குற்றம் சாட்டியது ரஷ்யா. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 430 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆயுதம்,…

சூடானில் மேலும் 7 நாட்கள் போர் நிறுத்தம்- ராணுவ தளபதிகள்…

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவமும், துணை ராணுவமும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான் மக்கள் தவித்து வருகிறார்கள். 3 வாரங்களுக்கு மேலாக நடந்து…

அகதிகள் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லைக்கு 1,500 அமெரிக்க ராணுவ…

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜோபைடன் பதவி காலத்தில் சட்ட விரோதமாக எல்லையில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை…

சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்: அமெரிக்கா

சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிகோலஸ் பர்ன்ஸ் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “ சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராகவே இருக்கிறது. நாங்கள் பேசுவதற்கு ஒருபோதும் வெட்கப்படவில்லை, சீனர்கள் எங்களை சந்திப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் இரு…

உக்ரைன் போரில் டிசம்பர் மாதம் முதல் 20 ஆயிரம் ரஷிய…

உக்ரைன் போர் டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 433-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா,…

துருக்கி நடத்திய தேடுதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் உயிரிழப்பு என தகவல்

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையின் போது கொல்லப்பட்டான் என்று எர்டோகன் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். நீண்ட காலமாக ஐஎஸ்ஐஎஸ்…

3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்

3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போரில் பலி எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து…

பராகுவே தேர்தலில் சாண்டியாகோ பெனா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது அதன் ஜனாதிபதி வேட்பாளரான சாண்டியாகோ பெனாவுக்கு அமோக முன்னிலை அளித்ததால், கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், நீண்டகாலமாக ஆளும் கொலராடோ கட்சி பராகுவே அரசியலின் ஆதிக்க சக்தியாக இருந்தது. ஏறக்குறைய 99% வாக்குப்பதிவு இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெனா 43% வாக்குகளைப்…

தென் சீனக்கடல் பகுதியில் பாதுகாப்பற்ற செயலை நிறுத்த வேண்டும்- சீனாவுக்கு…

பிலிப்பைன்ஸ் கப்பல் பின்வாங்கியதால் மோதல் தவிர்க்கப்பட்டது. இது தென் சீன கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து…

தலிபான்களை வெளிநாட்டில் அங்கீகரித்ததை எதிர்த்து ஆப்கானிஸ்தான் பெண்கள் போராட்டம்

அடுத்த வாரம் ஐ.நா உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்க வேண்டாம் என்று வெளிநாட்டு நாடுகளை வலியுறுத்தும் வகையில், அதிருப்திக்கு எதிரான ஒடுக்குமுறையை மீறி ஆப்கானிஸ்தான் பெண்கள் குழு இன்று காபூலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. 2021 இல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களின் உரிமைகள் மீதான…

பிரெஞ்சு அரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு

பல ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று பாரிஸ் மற்றும் பிற பிரெஞ்சு நகரங்களில் அணிவகுத்து, குடியேற்ற சட்டங்களில் திட்டமிட்ட மாற்றங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவான மயோட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிரெஞ்சு தலைநகரில், ஆர்ப்பாட்டக்காரர்கள், தர்மானின் சட்டத்திற்கு இல்லை என்றும் அடக்குமுறை, சிறைவாசம் மற்றும்…

சான் பிரான்சிஸ்கோவில் போதைக்கு அடிமையாகி ஒவ்வொரு 10 மணி நேரத்திற்கும்…

பிரிட்டிஷ் நாளிதழான தி கார்டியனின் அறிக்கை, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் 41 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இந்த அதிகரிப்பு ஒவ்வொரு 10 மணி நேரத்திற்கும் ஒருவர் தற்செயலான அளவுக்கதிகமான மருந்தினால் இறப்பதற்கு சமம் என்று அறிக்கை…