பிசிஏ மாற்றரசுக்கட்சியினரை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதல்ல: ஜாஹிட் உத்தரவாதம்

1 zahidகுற்றத் தடுப்புச் சட்ட (பிசிஏ)த்தில்  திருத்தங்கள் செய்யப்படுவது, இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்குப் பதிலாக அதனைப் பயன்படுத்துவதற்காக அல்ல  என்கிறார் உள்துறை அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட் ஹமிட். அதே வேளை,  மாற்றரசுக் கட்சியினரை மிரட்டும் நோக்கமும் அதற்குக் கிடையாது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அச்சட்டத் திருத்தங்கள் பரவலான குறைகூறலுக்கு இலக்கானாலும், குற்றத்தை எதிர்ப்பதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே அதன் அடிப்படை நோக்கமாகும் என்றாரவர்.