கர்பால்: வயதாவதற்கு முன்பு புத்ரா ஜெயாவை வெற்றி கொள்வோம்

Dap - Karpal -conquer Puterajayaவயதாகிக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தில் இடம் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என தாம் நம்புவதாக டிஎபியின் தலைவர் கர்பால் சிங் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெறும் கட்சியின் சிறப்பு மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய கர்பால், பக்கத்தான் ரக்யாட் அடுத்தப் பொதுத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றார்.

“இளைஞர்கள் எங்களிடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது இயற்கையான நடைமுறை. இன்று நான் காண்பதிலிருந்து, இளைஞர்களாகிய நீங்கள்தான் இந்நாட்டின் அடுத்த அரசாங்கதைப் பெறப்போகிறீர்கள்”, என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையில் கர்ப்பால் கூறினார்.

பினாங்கின் முன்மாதிரியை நாட்டின் இதர பகுதிகள் பின்பற்ற வேண்டும் என்று கூறிய அவர், அதிகாரத்தைப் பெறுவதற்கு தயாராகுமறு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

 

TAGS: