மந்தினில் பிஎஸ்எம் தலைமைச் செயலாளரும் பதினொருவரும் கைது

hakkaகம்போங் ஹக்கா மந்தினில் வீடுகளை உடைக்க முற்பட்ட மேம்பாட்டாளரைத் தடுக்க முயன்ற ஐந்து குடியிருப்பாளர்களும் ஏழு சமூக ஆர்வலர்களும் இன்று கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருள்செல்வனும் ஒருவர்.

100-ஆண்டு பழைமை வாய்ந்த அந்தக் கிராமத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடப்பது இது இரண்டாவது தடவையாகும். இதற்குமுன் செப்டம்பர் 12-இல், வீடமைப்பாளரின் ஆள்கள் வீடுகளை உடைக்க வந்தபோது, அதைத் தடுக்க முனைந்த கிராமத் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.

TAGS: