சொய் லெக்-எதிர்ப்புக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர் கலந்து கொண்டனர்

1 mcaகோலாலும்பூரில் மசீச கட்சித் தலைமையகத்துக்கு எதிரேயுள்ள ஒரு தங்குவிடுதியில், சுமார் 500 மசீச மத்திய பேராளர்களும் அடிநிலைத் தலைவர்களும் கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கின் தவறான நடவடிக்கைகள் பற்றிய விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அக்கூட்டத்துக்கு  வங்சா மாஜு தொகுதித் தலைவர் இயு தியோங் லுக் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர், சுவா கட்சியின் சொத்துகள் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

சுவா,  இவ்வாண்டு தொடக்கத்தில்  மசீச-வுக்குச் சொந்தமான எட்டு ஏக்கர் நிலத்தை ஒரு மேம்பாட்டாளருக்கு விற்றுவிட்டார் என இயு கூறினார்.

அது, காலஞ்சென்ற தொழில் அதிபரான லோ பூன் சியு, மசீசவுக்கு இரண்டாவது தலைமையகம் ஒன்றும் பயிற்சி மையம் ஒன்றும் கட்டுவதற்காக தானமாகக் கொடுத்த நிலம் என்றாரவர்.

 

TAGS: