அன்வார்: டிஎபி கிறிஸ்துவ மதத்தை பர்ப்புகிறது என்பது பொய்

anwar - dapபினாங்கில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு டிஎபி முயற்சித்தது என்று கூறுவோரை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வன்மையாகக் கண்டித்தார். தாம் அது போன்ற முயற்சி எதனையும் கண்டதில்லை என்றாரவர்.

செபராங் ஜெயா சந்தைக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், அக்கட்சி மற்றும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆகியோருக்கு எதிராக கூறப்படும் அது போன்ற குற்றச்சாட்டுகளில் உண்மை ஏதும் இல்லை என்றார்.

“எங்களுடைய அனைத்து கூட்டங்களிலிருந்தும், நான் பெற்ற அல்லது பார்த்த அனைத்து  டிஎபி ஆவணங்களிலிருந்தும் கட்சி அது போன்ற பிரச்னைகளை எழுப்பியதே இல்லை”, என்று அன்வார் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

“உண்மையில், அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், பாஸ்சும் பிகேஆரும் அதனை அனுமதித்திருக்காது”, என்று அவர் மேலும் கூறினார்.

 

 

 

TAGS: