ஜாஹிட்: பிசிஏ-இல் மாற்றம் செய்ய அரசாங்கம் தயார்

zahidசர்ச்சைக்குரிய  குற்றத்தடுப்புச் சட்ட(பிசிஏ)த்தைக் குறைகூறியுள்ள தரப்புகளுடன் பேச்சு நடத்திய பின்னர்,  தேவையென்றால்  அதில் மேலும் திருத்தங்கள் செய்ய அரசாங்கம்  தயாராக இருக்கிறது என  உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

பிரதமர் பணித்திருப்பதை அடுத்து,  அஹ்மட் ஜாஹிட், பிசிஏ-யைக் குறைகூறியுள்ள வழக்குரைஞர் மன்றம், என்ஜிஓ-கள் ஆகிய தரப்பினருடன்  பேச்சு நடத்துவார் என த ஸ்டார் அறிவித்துள்ளது.

“பிசிஏ-இல், வழக்குரைஞர் மன்றத்துக்கும் என்ஜிஓ-களுக்கும் திருப்தி அளிக்காத விசயங்கள் இருந்தால் அவை பற்றி விவாதிப்போம். அவற்றைத் திருத்துவது  அவசியம்  என்றால்  அடுத்துவரும்  நாடாளுமன்றக் கூட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவோம்”, என்று  அமைச்சர் கூறியதாக அச்செய்தித்தாள் கூறியது.

TAGS: