அன்வார்: என்றும் ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்புத் தெரிவித்ததில்லை

anwarபொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யைக்  கொள்கை அளவில்  என்றும்  எதிர்த்ததில்லை  என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.  இன்னும் சொல்லப்போனால், அந்த வரி பயனான ஒன்று, வெளிப்படையான ஒன்று என்றே எப்போதும் கூறி வந்திருப்பதாக அவர் சொன்னார்.

ஆனால், அதை அரசாங்கத்தின் பற்றாக்குறை நிலையைக் குறைத்து,  ஊழலை ஒழித்து,  மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பின்னர்  கொண்டு வந்திருக்க வேண்டும்  என்றாரவர்.

பக்காத்தான் ரக்யாட் ஆட்சியில் இருந்தால் அது ஜிஎஸ்டிக்கு  முன்னுரிமை  அளிக்காது;  ஊழலை ஒழிப்பதிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை  உயர்த்துவதிலும்தான்  கவனம்  செலுத்தும்  என அன்வார் குறிப்பிட்டார்.