முன்னாள்-இயக்குனருக்குக் கொடுக்கப்பட்ட டத்தோ பட்டம் திரும்பப் பெறப்பட்டது

1 johorஜோகூர் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு இயக்குனர் ஹம்சான் சரிங்காட்டுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ‘டத்தோ’ பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டரின் உத்தரவின்பேரில் அது உடனடியாக திரும்பப் பெறப்படுவதாக ஜோகூர் அரச மன்றச் செயலாளர் அப்துல் ரஹிம் ரம்லி கூறினார்.

“ஹம்சான் சரிங்காட் ‘டத்தோ’ பட்டத்தை இனி பயன்படுத்த முடியாது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

ஹம்சானுக்கு 2009-இல், அப்பட்டம் கொடுக்கப்பட்டது.