14வது பொதுத் தேர்தலில் 135 தொகுதிகளைக் குறி வைக்கிறார் கிட் சியாங்

kitஅடுத்த பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற எண்ணும் பக்காத்தான் ரக்யாட் 135 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல வேண்டும் என லிம் கிட் சீயாங் கூறினார்.

பிகேஆர், பாஸ், டிஏபி ஆகியவை ஒவ்வொன்றும் 45 இடங்களில் வெல்வதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அப்படி வென்றால் நாடாளுமன்றத்தில் பக்காத்தானின் பெரும்பான்மை 48-ஆக இருக்கும் என அந்த மூத்த அரசியல்வாதி குறிப்பிட்டார்.

அது ஒன்றும் சாதிக்க முடியாததல்ல. மூன்றுக்கும் அந்த வலிமை உண்டு என்றாரவர்.

 

TAGS: