ஒருநாள் சிறைத்தண்டனையை நீதிமன்றத்தில் கழித்தார் இப்ராகிம் அலி

1 aliநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் ரிம20,000 அபராதமும் விதித்தது.

ஒருநாள் சிறை என்றால் மாலை 5மணிவரை நீதிமன்ற லாக் அப்பிலேயே இருக்க வேண்டும்.ஆனால், நான்கு மணிக்கு அவர் கோலாலும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிற்றுண்டி நிலையத்தில் காணப்பட்டார்.

அவரின் வழக்குரைஞர், நண்பர்கள் ஆகியோருடன் அமர்ந்து ‘தே தாரிக்’ அருந்திக் கொண்டிருந்தார்.

அபராதத் தொகையைச் செலுத்தியதும் அதிகாரிகள் அவரை வெளியில் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.

ஆனால், 5மணிவரையிலும் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று கூறி இருந்தனர்.