சிங்கப்பூர் கலகம் தொடர்பில் மேலும் எண்மர் கைது; ஆயிரக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டனர்

1 arrestசிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை கலகத்துக் காரணமானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். நேற்று மேலும் எண்மர் கைது செய்யப்பட்டனர். 3,700-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் விசாரிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட எண்மரும் இந்திய நாட்டவர். 22-க்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இதுவரை,  கலகம் நடந்த இடத்தில் கைதான 28 பேர் உள்பட,  மொத்தம் 176 பேரிடம் குற்றப் புலன் விசாரணைத் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

விசாரணை  தொடரும்  என்றும்  மேலும்  பலர் கைது செய்யப்படலாம்  என்றும் போலீசார் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.