அரசாங்கம்: விலை உயர்வும் உதவித்தொகை குறைப்பும் நல்லதுக்குத்தான்

gov'tஅண்மையில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதும் உதவித் தொகை குறைக்கப்பட்டதும் மக்களிடம் வரவேற்பைப் பெறாதிருக்கலாம் , ஆனால், அவை பொருளாதாரத்துக்கு நல்லவை அதனால் “மக்களுக்கும் அவை நல்லவைதான்” என அரசாங்கம் கூறுகிறது.

“மலேசியப் பொருளாதாரத்தை வலுவாக வைத்திருக்க அரசாங்கச் செலவைக் கட்டுப்படுப்படுத்த வேண்டும். அதற்கு வரிகளை உயர்த்த வேண்டியிருக்கிறது உதவித் தொகையைக் குறைக்க வேண்டி இருக்கிறது.

“சில நடவடிக்கைகள் வரவேற்பைப் பெறாதிருக்கலாம், ஆனால், காலப்போக்கில் பொருளாதாரத்துக்கு நன்மை பயப்பது மக்களுக்கும் நன்மையாக அமையும்”, எனப் பிரதமர்துறை பத்திரிகைச் செயலாளா தெங்கு ஷரிபுடின் தெங்கு அஹ்மட் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.