டோல் கட்டண உயர்வு திருப்பி அடிக்கும்: அம்னோவுக்கு எச்சரிக்கை

1-dee-abdullaaசாலைக்கட்டண உயர்வு, அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவையே திருப்பி அடிக்கப்போகிறது என ரித்வான் டீ அப்துல்லா எச்சரித்துள்ளார்.

டோலை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவால் “குழப்பமடைவதாக” அந்தக் கல்வியாளர் கூறினார்.

“1மலேசியா என்று சொல்லி ‘மக்களுக்கு முன்னுரிமை, அடைவுநிலைக்கு முக்கியத்துவம்’ என்று முழக்கமிட்டதன் அர்த்தம் என்ன? தேர்தலின்போது மட்டும்தான் மக்களுக்கு முன்னுரிமையா?”, என ரித்வான் சினார் ஹரியானில்  கேள்வி எழுப்பி இருந்தார்.

மக்களுக்குச் சுமையை உண்டுபண்ணாமல் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

“இத்தனை விலை உயர்வுகளை மக்களால் எப்படிச் சமாளிக்க முடியும்?  BN என்றால் ‘Barang Naik’என்கிறார்களே, அதுதான் உண்மையோ?”, எனவும் அவர் வினவினார்.