அரசுக் கவிழ்ப்பு முயற்சி என்று கூறி விலை உயர்விலிருந்து கவனத்தைத் திருப்பப் பார்க்கிறார்கள்

1 azanபொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் டிசம்பர் 31 பேரணியை “அரசாங்கத்தைக் கவிழ்க்கும்” பேரணி என முத்திரை குத்துவது பேரணியின் உண்மையான நோக்கத்திலிருந்து “கவனத்தைத் திருப்பும்” முயற்சியாகும் என துருன் தலைவர் அஸான் சபார் கூறினார்.

“நாங்கள் அமைதியாக ஒன்றுகூடுவோம். சினமூட்டும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம். அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை எழுப்ப மாட்டோம்”, என்றவர் மலேசியாகினி நேர்காணலில் தெரிவித்தார். 

“அவ்வாறு கூறுவோர் உண்மையான விவகாரத்திலிருந்து கவனத்தைத் திருப்பப் பார்க்கிறார்கள்”, என்றாரவர்.