ஊடகங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது வழக்குரைஞர் மன்றம்

bar councilவார இதழ் த ஹீட் மீதான தடை விதிப்பைக் குறைகூறும் “சில தரப்புகளுக்கு” உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்திருப்பது வருத்தம் அளிப்பதாக வழக்குரைஞர் மன்றம் கூறியது.

நிர்வாகத்தின் செயல்கள் குறித்து கேள்வி எழுப்புவதும் கருத்துரைப்பதும் ஜனநாயகத்தின்  இன்றியமையாக் கூறாகும் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிரிஸ்டபர் லியோங் கூறினார்.

“அரசாங்கத்தின் செயல்கள் சரியாக இருந்தால் மற்ற தரப்புகளின் செயல்களோ குறைகூறல்களோ எந்த வகையிலும் அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை உண்டுபண்ண முடியாது”, என்றாரவர்.