மின்கட்டண உயர்வை எதிர்க்கும் 10,000 பேரிடம் கையெழுத்தைத் திரட்டியது பாஸ்

pasகூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர் பகுதி,  மின்கட்டண உயர்வைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளும்  10,000 பேரின்  கையொப்பம் அடங்கிய  மகஜர்  ஒன்றை  மின் விநியோகிப்பாளரான தெனாகா நேசனல் பெர்ஹாட்டிடம்(டிஎன்பி)  இன்று வழங்கியது. 

பாஸ்  இளைஞர் தலைவர் கைரில் நிஜாம் கிருடின்  பங்சார் தெனாகா நேசனல் அலுவலகத்தில் மகஜரை ஒப்படைத்தார்.

“எங்கள் மகஜர் மின்கட்டண உயர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் நாட்டின் எரிபொருள் தொழில் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது”, என்றாரவர்.