போலீஸ் ‘இரத்தம் சிந்த’ச் சொன்ன முப்தியையையும் விடவில்லை, விசாரித்தது

1 igpபுத்தாண்டுக்கு  முதல்நாள்  விலை-உயர்வை  எதிர்த்து  பேரணி  நடத்தியவர்களைக்  கொல்வது  தப்பில்லை  என்று  கூறிய  பேராக்  முப்தி  ஹருஸ்ஸானி  ஜக்கரியாவிடம்  போலீசார்  ஏற்கனவே  வாக்குமூலம் பதிவு  செய்து  விட்டனர்.

“அதில்  (தேசியப்  பாதுகாப்புக்கு) மிரட்டல்  விடுவதாக  எதுவும்  இருக்குமானால்  அதன்மீது  விசாரணை நடத்தப்படும். 

“குறிப்பிட்ட  சிலர்தான்  பாதுகாப்புக்கு  மிரட்டல்  என்பதில்லை. எல்லாரையுமே  விசாரிப்போம்.  ஆனால், நீங்கள் குறிப்பிட்ட  சிலரை  மட்டுமே  பார்க்கிறீர்கள்”, என போலீஸ்  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  காலிட்   இன்று  பிற்பகல் செய்தியாளர்களிடம்  பேசியபோது  கூறினார். .