என்ஜிஓ-கள்: சிலாங்கூரில் ஊராட்சி மன்றங்கள் செயல்படாமல் கிடக்கின்றன

ngoசிலாங்கூர் அரசாங்கம்,  ஊராட்சி  மன்ற  கவுன்சிலர்கள்  நியமனத்தைத்  தாமதப்படுத்துவதானது,  செயல்படும் ஊராட்சி  மன்றங்களைப்  பெற்றிருக்கும் சிலாங்கூர்  மக்களின் “அடிப்படை உரிமை”யை  மறுப்பதற்கு  ஒப்பாகும்  என நல்ல நிர்வாகத்துக்கான  கூட்டமைப்பு (சிஜிஜி)  கூறியுள்ளது.

2008 தேர்தலுக்குப்  பின்னர்  சிலாங்கூர்  அரசின் செயல்பாட்டைக்  கண்காணிக்க  உருவாக்கப்பட்ட  அந்த என்ஜிஓ-களின் கூட்டமைப்பு, 2014 ஜனவரி முதல்  நாளிலிருந்து  ஊராட்சி  மன்றங்கள் செயல்படுவதில்லை  எனக் கூறியது.  2014-ஆம்  ஆண்டுக்கான  கவுன்சிலர்  நியமனங்கள் மேலும்  ஒரு  மாதத்துக்குத் தள்ளிப்போடப்பட்டதுதான்  இதற்குக்  காரணமாகும்.