நஜிப் தமது சொத்துகளை அறிக்க வேண்டும், அம்பிகா சவால்!

Ambiga dares Najib

ஊழலை முற்றிலும் துடைத்தொழிக்கப் போவதாக கூறும் அரசாங்கம் அதன் ஈடுபாட்டை காட்டுவதற்கு பிரதமர் நஜிப் அவரது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அவருக்கு சவால் விடப்பட்டுள்ளது.

அச்சவாலை விடுத்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்எசிசி) வழிநடத்துபவர் பிரதமர் நஜிப் அவரது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அவரை கட்டாயப்படுத்துக்கூடியவராக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தார்.

“உம்மிடம் அதிகாரம் கிடையாது என்று கூறுவது போதுமானதல்ல…தமது வேலையில் தலையீடு இருக்குமானால் தமது பதவியை துறக்கக்கூடிய ஒரு எம்எசிசி தலைவரை நான் எதிர்பார்க்கிறேன்.

“பிரதமரை விசாரிக்க தயங்காத ஒரு எம்எசிசி தலைவரை நான் எதிர்பார்க்கிறேன்.

“முக்கியமாக, தாம் விசாரிக்கப்படுவதற்கு தயாராகவுள்ளதாக கூறி தமது சொத்துகளை அறிவிக்கும் ஒரு பிரதமரை எதிர்பார்க்கிறேன்”, என்று அம்பிகா நேற்றிரவு ஆற்றிய ஒரு கடுமையான உரையில் கூறினார்.

 

 

 

 

 

 

 

TAGS: