புதிய ரயில்வண்டிகளால் கேஎல் மொனோரெயில் உருமாறும்

monorailஇன்று   நான்கு-பெட்டிகள்  கொண்ட  12 புதிய ரயில்வண்டிகள்  வந்துசேர்வதைத்  தொடர்ந்து  கேஎல்  மொனோரெயில்  சேவை  உருமாறப் போகிறது. 

புதிய  ரயில்வண்டிகளால்  மொனோரெயிலின்  பயணிகளை ஏற்றிச்செல்லும்  திறன் 214-லிருந்து  430 ஆக  அதிகரிக்கும்  என ஷியாரிகாட்  பிராசரானா  நெகாரா பெர்ஹாட்  ஓர்  அறிக்கையில்  கூறியது.

இதனால் இனி  மொனோரெயில்களில் இப்போது  நிலவும்  நெரிசல்  குறையும்  என எதிர்பார்க்கப்படுகிறது.  ஒவ்வொரு  நாளும்  72,000  பேர்  மொனோரெயிலில்  பயணம்  செய்வதாக  அவ்வறிக்கை  கூறியது.

புதிய  வண்டிகள்  நன்கு  சோதிக்கப்பட்ட  பின்னரே  சேவையில்  ஈடுபடுத்தப்படும். அனேகமாக  இவ்வாண்டில்  மூன்றாம்  காலாண்டில்  அவை  ஓடத்  தொடங்கலாம்.